Sunday, November 1, 2015

மு.க. ஸ்டாலின் என்கிற தளபதி !





கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர். ஆனாலும் அவரின் அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லையென்றாலும் 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அரசால் மிசா காலகட்டத்தில் தளபதி திரு ஸ்டாலின் அவர்களை கைது செய்து சித்தரவதை செய்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அன்று அவர் வாங்கிய அத்தனை அடிகளும் சித்தரவதைகளையும் அவர் மீதானா மக்களின் பார்வை திரும்பியது. 




இதன் தொடர்சியாக அவர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்தவர் 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே அமைப்பு ரீதியாக திமுக இளைஞர் அணி தொடங்கபட்டு தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை நிறுவி அதன் மூலம் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.இன்று வரை கழகத்தின் முதுகெழும்பாய் வைத்திருக்கிறார். தளபதி பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.





திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி தன் தலைமைப்பன்பை நிருபித்தார்.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.





மேயராக இருந்து பல மேம்பாலங்களையும் பல அரசாங்க பள்ளிகளின் நிலைகளை உயர்த்தியவர்..இரண்டுமுறை மேயராக இருந்து ஒரு முறை உள்ளாட்சித்துறை அமைச்சாஅமைச்சராகவும் , துனை முதல்வராகவும் இருந்து சென்னையில் பாதள சாக்கடை திட்டத்தை நிறுவி, மகளிர் சுய உதவுகுழுக்கள் மூலமாக பல உதவிகள் செய்து சமத்துவபுரங்களை திறந்துவைத்தார்.

திரு ஸ்டாலின் அவர்கள் ஒரே நாளில் கட்சியின் மிக பெரிய அந்தஸ்த்துக்கு வந்தவரல்ல..சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தவர்.அவருக்கான மதிப்பு கட்சிக்குள்ளும், அதை தாண்டி பொதுமக்களிடமும் மிக பெரிய அளவில் இருப்பதை பார்க்க முடியும். அரசியலில் நேர் எதிர்மறை கருத்துகொண்ட துக்ளக் சோ ராமசாமி கூட ":திரு ஸ்டாலின் அவர்களை ஒரு வாரிசு அரசியல்வாதியாக பார்க்க முடியாது..அவரின் உழைப்பு அளவிடமுடியாதது" என்று நற்சான்று வழங்கி இருக்கிறார். சுனாமி நிதியை அரசியல் எதிரியான ஜெயாவிடமே நேரில் கொடுத்து தன் மதிப்பை மேலும் உயர்த்தியவர்.





சில நாட்களுக்கு முன் பேராசிரியரின் முன்னிலையில் கலைஞர் அவர்களே தலைவர் பதவிக்கு போட்டி என்று வந்தால் "ஸ்டாலின் அவர்களை முன்னிருத்துவேன்" என்று சொன்னது அவர் அவரின் மகன் என்பதால் அல்ல..அது அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த வார்த்தை.





"கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, நகர்பகுதி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கிராமத் தில் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சீரிய திட்டங்களைத் தீட்டுவது எனது கனவு"  ஸ்டாலின் சொல்லிய வார்த்தைகள்.. கூடிய விரைவில் முதல்வராவார் 





தளப"தீ"
என்று தெரியாமல் கைவைத்தவர்
புண்ணாகிப் போவர்
தெரிந்தே கை வைத்தவர்
மண்ணோடு மண்ணாகி போவர்..!




1 comment:

  1. வேசிக்குடும்பத்தை சேர்ந்த கருணாநிதி எப்படி வேசிகளை பணம் தராமல் ஏமாற்றி அவர்கள் பணத்தையும் அடித்து பறித்ததை கண்ணதாசன் வனவாசத்தில் விவரித்து எழுதியிருந்தார் . திருட்டு ரயில் ஏறி வந்த படிக்காத திருட்டு கருணா சாதாரண கதாசிரியராக இருந்து தன் கொள்ளையடிக்கும் திறனால் அரசியலில் நுழைந்து ஆசியாவிலேயே செல்வந்தனாக மாறினான்

    ReplyDelete